Showing posts with label மின்னல். Show all posts
Showing posts with label மின்னல். Show all posts

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை பாகம் 02

Continue Reading →

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை


பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை இந்த நேரத்தில் எனது சகோதரிக்கும் 2008 ஆம் ஆண்டு
6 மாதங்கள் கருப்பையில் ஒரு சிறிய கட்டி இருந்தது அதன் காரணமாக    இரத்த போக்கு ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்தார் .மருத்துவர் ஒரு சத்திர சிகிர்ச்சை செய்து இந்த கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார் .அதற்கு பெருமளவு பணம் தேவை என்றனர்.கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் தமிழ் மொழி பேசக்கூடிய சத்திர சிகிற்சை நிபுணர் இல்லை என்று எங்களுக்கு  சொல்லபட்டது. இந்த நிலையில்  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை இயேசு அழைகிறார் நிறுவனத்துக்கு
E மெயில் வழியாக எனது  சகோதரிக்காக செபிக்கும் படி வேண்டினேன் என்ன ஆச்ரியம் கொழும்புவில் உள்ள அரச மருத்துவ மனையில் அரச செலவில் எனது சகோதரியின் சத்திர சிகிர்ச்சை முடிந்தது அத்துடன் அந்த மருத்துவ மனையில் உள்ள தமிழ் பெண் மருத்துவரே எனது சகோதரிக்கு சத்திர சிகிர்ச்சை  செய்தார்இந்த விடுதலையை தந்த இயேசுவுக்கு எனது கோடான கோடி  ஸ்தோத்திரம். இயேசு அழைகிறார்  ஊழியங்களுக்கு   எனது  நன்றிகள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


எனது வாழ்வில் நடந்த அற்புதம் காண்க மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்
Continue Reading →

இயேசுவின் ரத்தம் படிந்த துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது




இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தபின்னர் அவரது உடலைப் பொதிந்து அடக்கம் செய்ததாக கருதப்படும் துணி இத்தாலி நாட்டின் தூரின் நகர தேவாலயத்தில் உள்ளது.
14.3 அடி நீளமும், 3.7 அடி அகலமும் கொண்ட இந்த துணியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரது உடலின் முன் மற்றும் பின் பகுதி பதிந்துள்ளது. மேலும் ஈட்டியால் குத்தியதில் இயேசுவின் விலாவில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் இத்துணியில் காணப்படுகிறது.
கடந்த 1988ம் ஆண்டு இந்த துணியின் சிறு பகுதியை ஆய்வு செய்த அமெரிக்க விஞ்ஞானிகள், இது 13ம் நூற்றாண்டளவில் போலியாக தயாரிக்கப்பட்ட ஓவியமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இத்தாலியின் பதுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த துணியின் மற்றொரு பகுதியை தற்பொழுது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். கார்பன் டேட்டிங் உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்துள்ளார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது என்றும் இயேசுவின் உயிர்ப்பின்பொழுது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Continue Reading →